பக்கம்:பாரி வேள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 பாரி வேள்

அவர்கள் பாடிய பாடல்களில் முல்லைக்குத் தேர் கொடுத்த வள்ளலென்று பாரியின் புகழ் படர்ந்தது.

பாரி வேறு பல வகையில் தன் கொடைத் திறத்தை வெளிப்படுத்தி யிருந்தாலும் ஓரறிவுயிராகிய முல்லைக் கொடியின் தளர்ச்சிக்கு மனம் ‘இரங்கித் தன் தேரை அளித்த வள்ளன்மையையே அது முதல் புலவர்களும் பிறரும் பெரிதாக நினைந்து பாராட்டினர். பாரி என்று பெயர் சுட்டாமலே முல்லைக்குத் தேரீந்த வன்' என்று சொன்ன அளவிலே அவனைத் தமிழுல கம் உணர்ந்து கொண்டது; இன்றும் அவன் முல்லைக் குத் தேர் வழங்கிய திறத்தைப் பாராட்டுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரி_வேள்.pdf/35&oldid=583853" இலிருந்து மீள்விக்கப்பட்டது