பக்கம்:பாரி வேள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்றுகை 49

'இத்தனை முரசுகள் சேர்ந்து ஒரே சத்தம் போடு கின்றன, அவற்றையுடைய நீங்கள் மூன்று மன்னர் களும் சேர்ந்து பறம்பு மலையை முற்றுகையிட்டிருக்கி lர்கள். இப்படியே முற்றுகையிட்டிருந்தால் மேலே உணவுப் பண்டம் வராமல் நாங்கள் யாவரும் பட்டினி யால் வாடுவோம் என்று நீங்கள் மனப்பால் குடித்துக் கொண்டிருக்கிறீர்கள். உண்மையை உங்களுக்குச் சொல்கிறேன்; கேளுங்கள். இங்கே நாங்கள் எந்த விதமான முயற்சியும் பண்ணுமலே நான்கு வகை உணவுப் பண்டங்கள் கிடைக்கின்றன. உழவர்கள் ஏரைப் பூட்டி உழவேண்டியதில்லை ; பயிர் செய்ய வேண்டிய அவசியம் இல்லை; களை பறிக்கவேண்டிய தில்லை. இயற்கையாகவே இந்தப் பறம்பு மலையில் அந்த நான்கும் கிடைக்கின்றன.'

நளிகோள் முரசின் மூவிரும் முற்றினும் உழவர் உழாதன நான்குபயன் உடைத்தே! " அப்பால் அந்த நான்கும் இன்னவை யென்று சொல்லியிருந்தார். .

"உழவர் உழுது நீர் பாய்ச்சிப் பயிர் பண்ணில்ை தான் நெல் கிடைக்கும் என்று நீங்கள் நினைத்திருக்க லாம். எங்களுக்கு இங்கே வேறு வகையான நெல் கிடைக்கிறது. அது வயலில் விளைகிறது. அன்று. சிறிய இலையையுடைய மூங்கில்கள் இங்கே நிறைய இருக்கின்றன. அவற்றிலே நெல் விளைகிறது. ஆகையால் கீழிருந்துதான் வரவேண்டும் என்பது

  • செறிந்த முரசுகளையுடைய நீங்கள் மூன்று பேரும் முற்றுகையிட்டாலும், இந்த மலே உழவர் உழுது பயிர் பண்ணுதனவாகிய நான்கு உணவுப் பண்டங்களே உடைய தாக இருக்கிறது. -

4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரி_வேள்.pdf/58&oldid=583876" இலிருந்து மீள்விக்கப்பட்டது