பக்கம்:பாரி வேள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$6.2 பாரி வேள்

மூன்று மன்னர்களும் ஒரு நாள் ஒன்றுகூடி, பாரியை வெல்ல வழி என்ன என்று ஆராய்ந்தார்கள். "இனிப் போர் செய்து வெல்வது என்பது நடவாத காரியம். வஞ்சகமாக அவனை வெல்லவோ, கொல் லவோ வழி இருந்தால் மேற்கொள்ளலாம். நாமே செய்யாமல் மறைவாக நின்று கொல்லக்கூடிய யாரை யாவது ஏவி நம் விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்ள லாம்" என்று பேசினர்கள், -

அந்தப் பாடல்களிலே ஒரு வழி குறிப்பாகத்

தெரிகிறதே' என்ருன் சோழன்.

"என்ன தெரிகிறது?" என்று மற்ற இருவரும் கேட்டார்கள். * . -

"பாணரும் விறலியரும் யாதொரு தடையும் இன்றிப் பாரியை அணுகலாம் என்பதைத்தானே அந்தப் பாடல்கள் தெரிவிக்கின்றன? அவனை அணுக முடியாமல் தவிக்கும் நமக்கு ஒரு வழியைச் சொல்லித் தருவதாக இல்லையா அது?’ என்று கேட்டான் சோழன். - -

"அது எப்படி? வீரக் கோலம் வேண்டாம்; பாண ராக வாருங்கள்; பாரியின் புகழைப் புாடுங்கள்' என் றல்லவா நம்மைப் பரிகாசம் பண்ணுகின்றன. அந்தப் பாடல்கள்? அவை நமக்குத் திரும்பி வருகிற வழியைக் காட்டினவே யொழிய அவனை வெல்லவா வழி காட்டின?' என்று வினவினுன் சேரன். - - "அது உண்மைதான். ஆலுைம் வைரத்தை வைரத்தால் அறுப்பதுபோல அந்தப் பாட்டின் பொரு ளைத் துணைக்கொண்டே வெல்ல வழி இருக்கிறது. பானராக நாமே பேர்கவேண்டும் என்பது என்ன? வஞ்சம் புரியும் முரட்டு ஆள் ஒருவனைப் பாணளுக்கி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரி_வேள்.pdf/71&oldid=583889" இலிருந்து மீள்விக்கப்பட்டது