பக்கம்:பார்புகழும் பாவேந்தர்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்புத் திரு முல்லை முத்தையா அவர்கட்கு. நலம். தங்கள் நலத்திலும் இல்லத்தார் நலத்திலும் பெரிதும் நாட்டம். தாங்கள் நட்புடன் விடுத்த அறுசுவை விருந்து பெற் றேன். ஏற்கனவே குமுதம்' இதழில் வெளியீடு பற்றி அறிந்தேன். நேரில் வந்து பெற்றுக் கொள்ள எண்ணி இருந்தேன். பாவேந்தரை அறிமுகப்படுத்த அரிய முயற்சிகளை மேற்கொண்டவர் என ஏற்கனவே அறிவேன். ஆயினும் இந்நூல் மூலமே அவரைத் தாங்கள் தமிழறிஞர் அனைவருக்கும் அறிமுகம் செய்தவர் என்கிற பெருமைக் குரிய செய்தியை தெரிந்து கொண்டேன். நூல் வெளியீட்டில் குறையாத ஆர்வம் ೬೯–೭೧. தான். ஆயினும், சென்னையில் தங்களுடன் இதுபற்றிப் பேச இயலாது போய்விட்டது. வணிகங் கருதி வருவதாலும் தொடர் அலுவல்கள் இருந்து வருவதாலும் இவ்வாறு நேர்ந்தது. இனி வரும் போது ஒரிரு நாள் கூடுதலாகத் தங்கியேனும் தங்கள் பட்டறிவைக் கேட்பேன். பிற நேரில், தங்கள் இரா. பாவாணன்