பக்கம்:பாற்கடல்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

25


சேவித்து எழுந்து கூடத்தை ஒருமுறை சுற்றிப் பார்க்கிறேன். இந்தப் பட்டக சாலையில் எத்தனை பெரிய ஆத்மாக்கள் நடமாடியிருக்கின்றன! நெஞ்சை அடைக்கிறது. வெளியில் நாலுபேர் சொல்லக் கேட்ட கதை, குடும்பத்தில் கேட்ட கதை, நேரே கண்ட கதை, எல்லாம் ஒன்றாய்ச் சேர்ந்து அமுக்குகையில் திரைச் சீலையின் படபடப்பு மார்பின் படபடப்பாக மாறுகிறது.

அம்முவாத்து அரங்கமேடை இதுதான்.

அமிர்தமய்யர் குடும்ப வழி, மருவலில் அம்முவாக மாறிவிட்டது. அதனால்தான் என் பெயரிலும் அந்த நாமமும் வழங்குகிறது.

கொள்ளுப் பாட்டாவும் பாட்டியும் - (குடும்பத்தில் அதற்கு முன் பெயர்கள் ஏதோ அமாவாசைத் தர்ப்பணத்தில் சொல்லத் திகழ்கின்றனவே அன்றி, அவர்களைப் பற்றிய நிச்சயமான தகவல் எல்லாம் புகைமண்டலம்) அர்த்தஜாமம் பின்னர்தான் ராச் சாப்பாடு - (அது சமையலோ, பழையதோ, மாவு சாதமோ, பலகாரமோ, பட்டினியோ - பெருந்திரு என்ன கொடுத்தாளோ அதுதான்) அதுபோல் தவறாமல் ஐம்பது அறுபது வருடங்கள் நடந்திருக்கின்றன. பால்ய விவாகம்.

அப்போதைய அர்த்தஜாமம் இப்போ நடக்கிற ஆபீஸ் நேரமல்ல. ஒன்பது மணிக்குக் கதவை இழுத்துப் பூட்டிக்கொண்டு, சாவியைத் தோளில் மாட்டிக் கொண்டு போய்விடுகிறார்களே! - அம்மனையும் சுவாமியையும் பள்ளியறைக்குக் கொண்டுபோய் விடும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/31&oldid=1533002" இலிருந்து மீள்விக்கப்பட்டது