பக்கம்:பாற்கடல் (சிறுகதைகள்).pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாற் கடல் 71

எனக்கு என்ன குறைஞ்சு போச்சு? எடுத்தவுடனே இக்கு பிடுங்கல் இல்லாமல், கையைக் கோத்துக்கொண்டு போனவாள் எல்லாம் கடைசியில், உலகம் தெரியாமல், மனுஷாள் தெரியாமல், எது நிலைச்சு துன்னு தெரியாமல், நாயும் பூனேயுமா நாறிண்டிருக்கிறதை நான் பார்த்துண்டுதானே இருக்கேன்! பையன் நல்ல வேளையா நாலாம் பிள்ளை யாத்தானே யிருக்கிருன். என் மாதிரி, என் பெண், வீட்டுக்கு மூத்த நாட்டுப் பெண்ணுய் வாழ்க்கைப் பட வேண்டாமே?”

அம்மா அப்படிச் சொல்றப்போ நன்குத்தானிருக்கு. நாவலில் கதாநாயகியா யிருக்க யார்தான் ஆசைப்படமாட்டார்கள்? ஆனல் தனக்கு என்று வரப்போதானே தெரிகிறது? நிஜமா, நீங்கள் அன் றைக்கு ஆதரவாய் எனக்கு ஒரு வார்த்தைகூட இல்லாமல் வண்டி யிலேறிப் போய்விட்ட பிறகு, எனக்கு அழுகையாய் வந்துவிட்டது. என் நெஞ்சின் பாரத்தை யாரிடம் கொட்டிக்கொள்வேன்? எல்லா ரும் எனக்குப் புதிசு. வாயில் முன் ருனே நுனியை அடைத்துக் கொண்டு கிணற்றடிக்கு ஓடிப்போய் விட்டேன்.

எத்தனை நாழிகை அங்கே உட்கார்ந்திருந்தேனே, அறியேன். "என்னடி குட்டீ, என்ன பண்றே?எனக்குத் தூக்கிப் போட்டது. அம்மா எதிரே நின்னுண்டிருந் தார். உங்கம்மா செக்கச் செவேல் என்று, நெற்றியில் பதக்கம் மாதிரி குங்குமம் இட்டுக்கொண்டு கொழகொழன்னு பசுப்போல் ஒரு ஒரு சமயம் எவ்வளவு அழகா யிருக்கிருர்! -

'ஒன்றுமில்லையே அம்மா' என்று அவசரமாய்க் கண்ணேத் துடைத்துக் கொண்டேன். ஆனல் மூக்கை உறிஞ்சாமல் இருக்க முடியவில்லை. -

'அடாடா! கடுஞ் ஜலதோஷம் மூக்கையும் கண்னேயும் கொட்டறதா? ராத்திரி மோர் சேர்த்துக்காதே. (கபடும் கருணை யும் கண்ணில் கூடி அம்மா கண்ணேச் சிமிட்டும்போது, அதுவும் ஒரு அழகாய்த்தானிருக்கிறது!) என்னமோ அம்மா, புதுப்பெண்ணு யிருக்கே, உன் உடம்பு எங்களுக்குப் பிடிபடறவரைக்கும், உடம்பை ஜாக்கிரதையாப் பார்த்துக்கோ-அட, குட்டி இதென்ன? இங்கே பாருடி!' o

அம்மா ஆச்சரியத்துடன் கிணற்றுள் எட்டிப் பார்த்துக்கொண் டிருந்தார். அவசரமாய் நானும் எழுந்து என்னென்று பார்த்தேன். ஆளுல் எனக்கு ஒன்றும் தெரியவில்லை.

"ஏ குட்டி, எனக்குத்தான் கண் சதை மறைக்கிறதா? கிணற் றில் ஜலம் இருக்கோ???

'இருக்கிறதே!” 'குறைஞ்சிருக்கா?"