பக்கம்:பாற்கடல் (சிறுகதைகள்).pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 பாற் கடல்

அதனுல் ஒன்றுமில்லை. என்னவோ எனக்குத் தோன்றிற்று; அவ்வளவுதான். இந்தச் சமயத்தில் இவர்களே நான் நமஸ்கரித்த தால், மேலிருந்து இவர்கள் பெற்று வந்த அருளில் கொஞ்சம் ஸ்வி கரித்துக் கொள்கிறேன். சந்ததியிலிருந்து சந்ததிக்கு இறங்கி வரும் பரம்பரை அருள். -

எங்களுக்கெல்லாம் எண்ணெய்க் குளி ஆன பிறகு மாடிக்குப் போன அம்மா, வழக்கத்தைவிடச் சுருக்கவே திரும்பி வருகிருர், சமாசாரம் தந்தி போல் பறந்து பரவுகிறது, 'பாட்டி கீழேவர ஆசைப் படுகிருர். அப்பாவும் அம்மாவும் மேலேறிச் செல்கிருர்கள். நாங் கள் எல்லோரும் சொர்க்க வாசல் தரிசனத்திற்குக் காத்திருப்பது போல் பயபக்தியுடன் மெளனமாய்க் காத்திருக்கிருேம். சட்டென நிஜனப்பு வந்தவனுய் ஒரு கோள்ளுப்பேர வாண்டு ஸ்டூலே வைத்து மேலேறி, மாடி விளக்கின் ஸ்விட்சை’ப் போடுகிறன்.

திடீரென மாடி வளைவில் பாட்டி தோன்றுகிறர். விமானத்தில் கல்ாமியை எழுப்பினுற்போல் நாற்காலியில் அவர் இருக்க, அம்மா வும் அப்பாவும் இருபக்கங்களிலும் நாற்காலியைப் பிடித்துக்கொண்டு வெகு ஜாக்கிரதையாய், மெதுவாய்க் கீழே இறங்குகிருச்கள். பிறகு பத்ரமாய் அப்பா பாட்டியை இரு கைகளிலும் வாசித் துக்கிக் கொண்டு போய் மணேமேல் உட்கார்த்தி வைக் கிரு.ர். அப்பா பிடித்

ண்டிருக்க, அம்மா, பதச் சூட்டில் வெந்நீரை மொண்டு ټري _في ஊற்றி, பாட்டி உடம்பைத் தடவினுற்போல் தேய்க்கிறர்.

நாங்கள் எல்லோரும் சுற்றி நின்று பார்க்கிருேம்.

இது ஆராதனை இல்லாது எது? ஆமாம், பாட்டியின் உடல் நிஜல அடிக்கடி குளிப்பதற்கில்லை. எந்தச் சாக்கில் மாரில் சளி தாக்கி விடுமோ எனும் பயம். உத்லவருக்கு விசேஷ நாட்களில் மாத்திரம் அபிஷேகம் நடப்பதுபோல் பாட்டிக்கு, நாள், கிழமை, பண்டிகை தினம் போதுதான், சர்வ ஜாக்கிரதையாய்க் குளிப்பாட்டு நடக்கும். சற்று அழுத்தித் தேய்த்தால் எங்கே கையோடு சதை வந்துவிடுமோ எலும்படி உடல் அவ்வளவு நளினம், அந்த உடலில், மானம் இெட்கம் எனும் உணர்ச்சி விகாரங்களுக்கே எங்கே இடம் இருக் கிறது? எந்த நேரத்தில் இந்த உடல் விலங்கைக் கழற்றி எறிய்ப் ப்ேரிசிருேம் என்றுதான் அந்த உயிர் காத்துக் கொண்டிருக்கிறதே! மரம் சாய்ந்து விட்டாலும் வேர்கள் பூமியிலிருந்து கழல மாட்டேன் என்கின்றன. பாட்டி நூறு தாண்டி ஆகிவிட்டார் என்று நினைக் கிறேன். வருடங்களின் ஸ்புடத்தில், அங்கங்கள், சுக்காய் உலர்ந்து, உடலே சுண்டிய உருண்டை ஆகிவிட்டது. - -

பாட்டியின் உடம்பைத் துவட்டி அவர் மேல் புடவையை மாட்டி நாற்காலியில் வைத்துக் கூடத்து வெளிச்சத்துக்குக் கொண்டு வருகிஆர்கள். நாங்கள் எல்லாம் நமஸ்கரிக்கிருேம். பாட்டி மேல் கல்லேப்போல் மெளனம் இறங்கிப் பல வருஷங்கள்