பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பைம்பொழில் 63. வில்லை நாண் ஏற்றினான் என்றால் போதுமா? அதனை வளைத்து முறித்தானா என்பது தெரிய வேண்டுமே. மேலும் கூறுகிறாள். ஒரு நொடி நேரத்தில் வல்லை எடுத்தான்; இதற்கு முன்பே எடுத்துப் பழகிய ஒரு பொறி போல நாணேற்றி வளைத்து முறித்தான்: 'மாத்திரை அளவில் தான் மடுத்து முன்பயில் சூத்திரம் இது எனத் தோளின் வாங்கினான் ஏத்தினர் இமையவர் இழிந்த பூமழை வேத்தவை நடுக்குற முறிந்து வீழ்ந்ததே' (61) தேவர்கள் பூமாரி பொழிந்தனராம். வில் இற்ற ஒலி கேட்டு அவையே நடுங்கிற்றாம். ஒரு தொடரில் சொல்ல வேண்டிய செய்தியை, சீதையின் ஆவலைத் தூண்டும் முறையில் பல தொடர்களில் கூறியதாக அமைந்துள்ள சுவையான இந்தப் பகுதி ஒரு கம்ப சூத்திரமோ? ஆசிரிய இராமாயணம் சீதையின் ஆவலைத் தோழி தூண்டும் இந்தப் பகுதி வால்மீகி இராமாயணத்தில் இருப்பதாகத் தெரியவில்லை. இது கம்பரின் சுவையான சொந்தப் படைப்பாகவே தோன்றுகிறது. கம்ப இராமாயணம் விருத்தப் பாவால் ஆனது. 'விருத்தமென்னும் ஒண்பாவிற்கு உயர் கம்பன்' எனக் கம்பர் சிறப்பிக்கப் பெற்றுள்ளார். தமிழில் ஆசிரியப் பாவால் ஆன இராம காதை ஒன்று இருப்பதாகத் தெரிகிறது. தொல்காப்பியம் - பொருளதிகாரம்-அகத். திணையியலில் உள்ள 'மக்கள் நுதலிய அகன் ஐந் திணையும் சுட்டி ஒருவர் பெயர்கொளப் பெறாஅர்’ (54). என்னும் நூற்பாவின் உரையில், சுட்டி ஒருவர் பெயர் கொண்ட கைக்கிளைக்கு எடுத்துக்காட்டாக, நச்சினார்க் கினியர் ஆசிரிய இராமாயணப் பாடல் ஒன்றைத். தந்துள்ளார். அதன் கருத்தாவது: