உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாலஸ்தீனம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

VI
கலகங்கள்

பாலஸ்தீனத்தின் நிருவாகத்தை பிரிட்டனிடம் ஒப்புவிப்பது என்ற பேச்சு, நேசக் கட்சியினருக்குள் நடைபெற்றுக் கொண்டிருக்கையிலேயே, அங்கு—பாலஸ்தீனத்தில்—யூத—அராபியக் கலகம் தோன்றி விட்டது. ‘மாண்டேடரி’ அரசாங்கம் ஏற்படுமென்ற சூசகம் தெரிந்த காலத்திலேயே, அராபியர்கள் ஆக்ரோஷத்தோடு கிளம்பினார்கள். எனவே, 1936ம் வருஷம் ஏற்பட்ட கலகந்தான், யூதர்களுக்கும் அராபியர்களுக்கும் ஏற்பட்ட முதல் கலகம் என்று யாருமே எண்ண வேண்டுவதில்லை.

1920ம் வருஷம் ஏப்ரல் மாதம் அராபியர்கள், யூதர்களைத் தாக்கினார்கள். இதில் ஐந்து பேர் மரணமடைந்தனர்; 211 பேருக்குக் காயம். இந்தக் கலகத்திற்குக் காரணமென்ன வென்பதைப் பற்றி பீல் கமிஷன் அறிக்கை பின் வருமாறு விளக்குகிறது:-

1. யுத்த காலத்தில், தங்களுக்குச் சுதந்திரம் கொடுக்கப்படுமென்று பிரிட்டிஷார் அளித்த உறுதி மொழிகள் நிறைவேற்றப் படாமையினால், அராபியர்கள் கலகத்திற்குக் கிளம்பினார்கள்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலஸ்தீனம்.pdf/55&oldid=1672034" இலிருந்து மீள்விக்கப்பட்டது