இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பாலையாடிய பெருங்கடுங்கோ செய்தருளிய தம்முள்ளே ஒருங்கே மனங் கலந்து இணைந்த தலைவன் தலைவியரின் வாழ்வில், ஒருவரையொருவர் அகன்று சிலகாலம் பிரிவதென்பதும் நிகழக் கூடியதே! அப்படிப் பிரிவு நேரும்போது தலைவியின் வேதனை மிகுதியாலே அவளது இயல்பான அழகுநலம் எல்லாம் கெட்டுப் போய்விட, அவள் வருந்திப் புலம்புகின்றனள். கோடைக்காலத்தின் வறட்சியினால் தம் வளமை கெட்டுப் போய்த் தோன்றும் முல்லையும் குறிஞ்சியுமாகிய நிலங்கள், பாலைத்தன்மை பெற்று வெம்மையையும் துயரத்தையும் தருவனவாக மாறுகின்றன! இவற்றை இணைத்துப் படைத்துள்ள உள்ளத்தை உருகவைக்கும் கலிப்பாட்டுக்கள் இவை.