பக்கம்:பாலைச்செல்வி.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 இ. புலவர் கா. கோவிந்தன் "தொடங்கற்கண் தோன்றிய முதியவன் முதலாக, அடங்காதார் மிடல்சாய, அமரர்வந்து இரத்தலின், மடங்கல்போல் சினை.இ, மாயம்செய் அவுணரைக் கடந்துஅடு முன்பொடு முக்கண்ணான் மூளயிலும் உடன்றக்கால் முகம்போல ஒண்கதிர் தெறுதலின், சீறரும் கணிச்சியோன் சினவலின், அவ்எயில் ஏறுபெற்று உதிர்வனபோல் வரைபிளந்து இயங்குநர் ஆறுகெட விலங்கிய அழல்அவிர் ஆரிடை மறப்பரும் காதல் இவள் ஈண்டு ஒழிய, இறப்பத் துணிந்தனிர் கேண்மின் மற்று ஐஇய! தொலைவாகி இரந்தோர்க்கு ஒன்றுஈயாமை இளிவுஎன மலைஇறந்து செயல்குழ்ந்த பொருள் பொருளாகுமோ? நிலைஇய கற்பினாள், நீ நீப்பின் வாழாதாள் முலையாகம் பிரியாமை பொருளாயின் அல்லதை; இல்லென இரந்தோர்க்கு ஒன்று ஈயாமை இளிவு.எனக் கல்இறந்து செயல்சூழ்ந்த பொருள் பொருளாகுமோ? தொல்இயல் வழாஅமைத் துணைஎனப் புணர்ந்தவள் புல்லாகம் பிரியாமை பொருளாயின் அல்லதை; இடன்இன்றி இரந்தோர்க்கு ஒன்றுஈ யாமை இளிவு.எனக் கடன்இறந்து செயல்சூழ்ந்த பொருள் பொருளாகுமோ? வடமீன்போல் தொழுதேத்தும் வயங்கிய கற்பினாள் தடமென்தோள் பிரியாமை பொருளாயின் அல்லதை; எனஇவள், புன்கண் கொண்டு இணையவும், பொருள்வயின் அகறல் அன்பு:அன்று என்று யான்கூற, அன்புற்றுக் காழ்வரை நில்லாக் கடுங்களிற்று ஒருத்தல் 10 15 20 25

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/18&oldid=822187" இலிருந்து மீள்விக்கப்பட்டது