பக்கம்:பாலைச்செல்வி.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 6)Imrlg.uu g;mruD6QJr அண்மையில் மணம் முடித்து, மனையறம் மேற் கொண்ட இளங் காதலர்கள் இருவர் ஒருயிரும் ஈருடலுமாய் இணைந்து வாழ்ந்திருந்தனர். கனிந்த காதல் உள்ளம் வாய்க்கப் பெற்ற அவர்கள், கடமையுணர்வும் வாய்க்கப் பெற்றிருந்தனர். அதனால், தம் வீடும் நாடும் வளம் பெற்று வாழத் துணை புரியவல்ல சில கடமைகளை மேற்கொண்டு, அவன் வெளியூர் செல்ல வேண்டிய தாயிற்று. அதற்கு ஆவன மேற்கொண்ட அவன், வெளி யூர்க்குச் செல்ல வேண்டிய இன்றியமையாமையினைத் தன் மனைவியின் தோழிக்கு மெல்ல அறிவித்தான். தான் அறிந்த ஒன்றைத் தன் தோழிக்கு மறைப்பது கூடாது எனும் மனம் உடையவள் அத்தோழி. அதனால் அவள் அச் செய்தியை, அவன் மனைவிக்கு அறிவித்தாள். அது கேட்ட அப்பெண் மனம் கலங்கினாள். கடமை மேற் கொண்டு வெளியூர் செல்ல வேண்டுவது கணவனுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/20&oldid=822209" இலிருந்து மீள்விக்கப்பட்டது