பக்கம்:பாலைச்செல்வி.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரியின் இறப்பள் காதல் பெரிதா கடமை பெரிதா என்பதைத் துணிந்து முடிவு செய்யமாட்டாத பருவம் உடையான் ஓர் இளைஞன். மனம் விரும்பி மணந்து கொண்ட மனைவியோடிருந்து, இல்லறப் பயனாம் இளமை இன்பத்தை நுகரத் தொடங்கியவன்; அவ்வின்பத்தை ஆரத் துய்த்து மனநிறைவு பெறாத இளமையுடையவன்; அதே சமயத்தில் பொருள் ஈட்டி இரவலர்க்கு ஈதலால் பெறும் புகழாற் பெறலாம் பேரின்பப் பெருமையினையும் உணர்ந்தவன். இளமைக் காலத்து இன்ப உணர்வு ஒருபால் ஈர்க்க, இறவாப் புகழின்பால் சென்ற பற்றுள்ளம் பிறிதொரு பால் ஈர்க்க, காதலைக் கருதுவதா? கடமையை மதிப்பதா? இன்பத்தில் திளைப்பதா? புகழ் பெற முயல்வதா? என்பனவற்றுள் எதையும் துணிய மாட்டாது தடுமாறும் நிலை, அவன் நிலை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/38&oldid=822289" இலிருந்து மீள்விக்கப்பட்டது