பக்கம்:பாலைச்செல்வி.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 பொருள் உயிர் தருமோ? ஒர் ஆவிற்கு இருகோடு தோன்றினாற் போல், ஒர் உயிரும் ஈர் உடலுமாய் இணைபிரியாது அன்பால் ஒன்றி வாழும் இளங்காதல் இருவர், தமிழகத்துப் பேரூர் ஒன்றில் பெருவாழ்வு வாழ்ந்திருந்தனர். அவர்கள் வாழ்வில் வறுமையில்லை; பிரிவறியாப் பேரன்புடைமையால், இன்பம் நிறைந்த இல்லற வாழ்வு மேற்கொண்ட அவர்கள், சிறந்த பல பண்பாடும் பெற்றிருந்தார்கள். கணவன் காதற் சிறப்புணர்ந்தவன்; ஆனால், அக் காதல் மயக்கத்தால் கடமையை மறப்பவனல்லன். மனைவி மகிழ மனையகத் திருந்து வாழும் வாழ்க்கையில் மகிழ்ச்சியுளது எனினும், அஃதொன்றே வாழ்வின் பயனாகி விடாது. அரண் போலும் அழகிய பெரிய மனையில், முன்னோர் ஈட்டி வைத்துள்ள மலை போலும் மாநிதிக்கிடையே, மனைவி யோடிருந்து வாழும் வாழ்வு, சிறந்த பேறுடையதே யெனினும், அது விழுமிய வாழ்வு என வாழ்த்துதற்கு உரியதாகிவிடாது. தான் மகிழ்ந்து வாழ்தலைப் போன்றே,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/52&oldid=822305" இலிருந்து மீள்விக்கப்பட்டது