பக்கம்:பாலைச்செல்வி.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 செறிக நின் வளையே! இன்பம் நுகர வேண்டிய இளமைப் பருவம் உடையான் ஒருவன், பொருளீட்டும் முயற்சி மேற் கொண்டு, அண்மையில் மணந்து கொண்ட மனைவியைத் தனியே விடுத்து வெளிநாடு செல்ல விரும்பினான். ஆனால், தன் விருப்பத்தினைத் தன் காதலிக்கு உரைத்து, அவள்பால் விடைபெற்றுச் செல்வது இயலாது என்பதை உணர்ந்தான். அதனால், அவளுக்கு அறிவியாது, அவள் தோழியை அழைத்துத் தன் முடிவினைக் கூறினான். அவன் முடிவு கேட்டு அஞ்சினாள் தோழி. அவன் பிரியின், அவன் மனைவி, அப்பிரிவாலாய துயர் தாங்கி, உயிர் கொண்டிராள். அத்துன்பத்தைத் தாங்கிக்கொள்ளும் அத்துணை வன்மை அவள் உள்ளத்திற்கில்லை என்பதை உணர்ந்த தோழி, அவனைப் பிரிந்து செல்லாவாறு, எவ்வாற்றானும் தடுத்து நிறுத்தி விடுதல் வேண்டும் என விரும்பினாள். உடனே, போக விடை கொண்டு நிற்கும் அவனை நோக்கி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/79&oldid=822334" இலிருந்து மீள்விக்கப்பட்டது