பக்கம்:பாலைப்புறா.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

149

சு. சமுத்திரம்

வத்தை பாழும் கிணத்தில தள்ளிட்டோமே... எம்மா... நான் பெத்த மவளே!’

கலைவாணி, அசைந்து கொடுக்கவில்லை; அம்மாவிடம் இருந்து திமிறி மீண்டும் குப்புறப்படுத்தாள். கண்களில் ஒரு சொட்டு நீர்கூட தேங்கி நிற்காமல், முகம் விறைக்க வாய் பூட்டிக் கொள்ள, தரையைத்தவிர எவரையும் பார்க்க விரும்பாததுபோல் கிடந்தாள். கமலநாதன், அவள் தலையை தொட்டபடியே கலை... கலை என்று சொன்னபோதே அழுது விட்டான். அவன் கண்ணிர், கலைவாணியின் பின் கழுத்தில் சொட்டுச் சொட்டாய் விழுந்து தெறித்தது. குழல்வாய்மொழி, கட்டிலில் ஒரு ஒரமாக உட்கார்ந்து கொண்டு..., ‘கலை, கலை' என்று கீச்சிட்டாள். பலராமன், கண்கள் சிவந்து விட்டன. அழுகையாக ஒரு கண்... ஆத்திரமாய் மறு கண். சீனியம்மா, ஒரேயடியாய் இப்போது மகள் மேல் புரண்டாள். அவள் முதுகிலேயே, தன் தலையைப் போட்டுப் போட்டு மோதினாள். மகளைப் புரட்டி எடுக்கப் போனாள். ஆனால், அந்த மகளோ, இப்போது லேசாய் விம்மினாள். விம்மி, விம்மி கட்டில் துவாரங்கள் வழியாய்க் கண்ணிர் சிந்திக் கொண்டிருந்தாள். அவள் முதுகு குலுங்கியது. பின்தலை ஆடியது.

இதற்குள், கூட்டம் கூடிவிட்டது. ஒரு சிலரைத் தவிர, பெரும்பாலானோர் முற்றத்தில் நின்றார்கள். திண்ணையை அடைத்தார்கள். இதில் அதிகமானபேர் பங்காளிகள்; நெருங்கிய உறவினர்கள். அத்தனை பேரும் வாயடைத்துப்போய் நின்றார்கள். அவளுக்கு நடந்தது போல், கார் காராய், எந்த திருமணமும் நடந்ததும் இல்லை; நடந்த வேகத்திலேயே இப்படி முடிந்ததும் இல்லை. எந்தப் புற்றுக்குள் எந்தப் பாம்பு இருக்குமுன்னு தெரியலியே... உள்ளூர்க்காரன் என்று நம்பிக் கொடுக்க முடியாது போலிருக்கே...

இதற்குள், கலைவாணி இருந்த அறைக்குள் தாவிப் போன தேனம்மாவும், கனகம்மாவும் கலைவாணியைத் திருப்பினார்கள். அவள் தலை கனகம்மாவின் மடியிலும், கால்கள் தேனம்மாவின் முழங்கால்களிலும் கிடந்தன. கனகம்மா, தான் போட்டிருக்கும் பாம்படங்களே உணர்வுகளின் வெளிப்பாடாக, கலைவாணியின் முகத்தைத்துடைத்தபடியே, கூக்குரலாய்ப் பேசினாள்.

‘ஊருக்கெல்லாம், புத்தி சொன்ன நீயே... இப்படி கலங்குனால் நாங்க யார் கிட்டம்மா போவோம்?... மாரியாத்தா மூதேவி, ஒனக்கு, வழிகாட்டுவாம்மா... ஆண்டிப்பயல் முருகன், ஒனக்கு அடைக்கலம் கொடுப்பாம்மா...’

வெளியே ஒரு சத்தம்... உள்ளுர் விவேகிகளில் ஒருவரும், ராமசுப்புவும் கலந்து போட்ட சத்தம்.

‘ஏழா... முட்டாப்பய மவளுகளா... கலைவாணிக்கு ஆறுதல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/149&oldid=1405156" இலிருந்து மீள்விக்கப்பட்டது