பக்கம்:பாலைப்புறா.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு.சமுத்திரம் 213

வீடுகளில் துப்பாக்கிக்குப் பதிலாக, துடைப்பங்களையும் பிடித்தபடி நிற்பார்கள். இப்படிப்பட்டப் பகுதியில், ஒரு உச்சி அறையை, மனோகர் தெரிந்து எடுத்தானா... தெரியாமலாஎன்பது தெரியவில்லை. இன்னும் சொல் லப் போனால், அவனை அன்று உரிமையோடு ‘டா’ போட்டுப் பேசிய அன்பு மணிதான், இந்த அறைக்குக் கூட்டி வந்தான். வீட்டைக் காலி செய்ய வேண் டும் என்று அதட்டிய நாராயணசாமி, போலீஸ்க்குப் போவதாய் மிரட்டிய போது ‘போய்ப்பார் எய்ட்ஸ் இருக்கிறவனைப் பிடிக்க எந்த சட்டத்திலும் இடமில்லை என்றான். இவன் இங்கேதான் இருப்பான். வேண்டுமானால் நீங்க காலி பண்ணுங்கோ என்று அவர்களை அசத்திவிட்டான். ஆனாலும்,நாராயணசாமி வகையறாக்களுடன் ஒரு சமாதானம் ஏற்பட்டது. வாடகையையும் கொடுக்காமல், பத்தாயிரம் ரூபாயும் வாங்கப்பட்டு, கலைவாணி குடியிருந்த அந்த வீடு, காலி செய்யப்பட்டது.

மனோகருக்கு, அறைத்தோழர்கள்குத்திக்கொள்வதை மீண்டும் தானும் குத்திக் கொள்ள வேண்டும் போல் மனம் துடித்தது. துள்ளியது. ஆள் மாற்றிகளாக, முழங்கையும் பின் கையும் சங்கமிக்கும் இடத்தில் குத்திக் கொள்கிறார்களே, அப்படிக் குத்திக் கொள்ள வேண்டும்... அதுதான் மனோவலியை, மாபெரும் சொர்க்கமாக மாற்றும்... மாற்றிக் காட்டும்...

மனோகர், அவர்கள் குத்தி முடியட்டும் என்பதுபோல், இன்னொரு தொளதொளப்பான சிகரெட்டைபற்ற வைத்தான். பாதியை, ஒரே இழுப்பாய் இழுத்து விட்டு, மீதியை ரோம வாடையோடு மார்பில் வைத்துப் பொசுக்கினான். அதன் வலியைப் பொருட்படுத்தாமலே, அவர்களைத் தவிப்பாய் தவித்துப் பார்த்தான். குத்தி முடித்துவிட்டு, நாற்காலியில் இருந்து நழுவிக் கொண்டிருக்கும் சதாசிவன் படு ஒல்லி... உடம்பெங்கும் படைபடையான கருந்திட்டுக்கள். கீழே விழுந்து விழுந்து. மேலே போய்க் கொண்டிருந்தான்... இன்னொருத்தன்... சுவர் மூலையில் சாத்தி வைத்த துடைப்பமாய் கிடந்தான்... நாக்கு முழுவதும் காளான் முளைத்தது மாதிரியான வெள்ளைமயம் கொண்ட சசிகுமார்... தோளிலும் பிடறியிலும் சிவப்புக் கோடுகளைக் கொண்ட நித்திய குமார். கருகிப் போன சிவப்பன். கால் கைகள்iங்கிப் போன சேகர். கண்களைத்துருத்தியதடிப்பயல் ராமு. இன்னும் இரண்டு மூன்று பேர். வெளிப்படையாய்ப்பார்த்தால் ஆரோக்கிய மாய்த் தெரியும் அன்புமணி... அளவான உயரம்... அளவுக்கு மீறிய வசீகரம். எல்லாவற்றிற்கும் மேலாக, எஸ்தர்... பேண்டும் அசல் ஆம்பிளைச் சட்டையும் போட்டவள். உள்பாடி போடாத டோன்ட் கேர்காரி; மார்பகம் போல், உடல் முழுவதும் ஒரு மதர்ப்பு... தடிப்பு...

அன்புமணி, எஸ்தர் கையில் ஊசியைக் குத்திக் கொண்டிருந்தான். உள்ளே எதுவுமே இல்லை என்று போக்குக் காட்டும் நிறமற்ற திரவம்... ஊசி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/213&oldid=635656" இலிருந்து மீள்விக்கப்பட்டது