பக்கம்:பாலைப்புறா.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 பாலைப்புறா

என்னடா செய்தேன்னு கேட்கப் போனான். நாக்கு, உள்ளேதான் போனது... கலைவாணிக்காக வைத்திருக்கிற பணன்டா... என்று சொல்லப் போனான். வாய் திறப்பதற்குப் பதிலாய் பூட்டிக் கொண்டது. அதோடு அவன் சஞ்சாரம் செய்த உலகில், எங்கு பார்த்தாலும் கட்டுக்கட்டாய் நோட்டுக்கள்... தங்கம்... தங்கமாய் நாணயங்கள்... எடுத்துக் கட்டுமே...!

‘எடுத்துக்கடா... என்அன்பே எடுத்துக்கோ’ ‘'எதுலடா வச்சிருக்கே?’ ‘சூட்கேஸ்லே?” ‘சொல்லாத நம்பரை எப்படிடா பொருத்துறது”

‘மூன்று தடவை ஏழு. எடுத்துக்கோ...’ அன்புமணியும் நித்தியகுமாரும், எஸ்தரையும், மனோகரையும் மீண்டும் ஒன்றாக்கி விட்டு, மாடத்தில் உள்ள சூட்கேசை கீழே இழுத்துப் போட்டார்கள். மூன்று தடவை ஏழு... முழுசும் நோட்டுக்கள். மார்பின் ‘மருந்து வேண்டாம்... பெத்தடின் இருக்கையில் அது எதுக்கு? அந்த பெத்தடின் கூட வேண்டாம். மாரிஜூவானா இல்லாட்டி... ஹளபீஸ்... சேரிப் பையங்க பத்து ரூபாய்க் குத்திக்கிற மில்லி மருந்தைக்கு குப்பையில் போடு’ மாரிஜுலானாவை ஊசியிலே ஏற்று!

அன்புமணியும் நித்தியகுமாரும் சூட்கேசை பூட்டாமலே ஒடினார்கள். அந்த சூட்கேஸ் இப்போது வாய் பிளந்து, தனது உரிமைக்காரனை ஏளனமாய்ப் பார்ப்பது போல் தோன்றியது.

நேரம் போகப் போக... எஸ்தருக்கும், மனோகருக்கும் போதை போய்க் கொண்டிருந்தது. ஏறிய வேகத்தில் இறங்கிக் கொண்டிருந்தது. ஆனால், அது முழுசாய் இறங்காமலும் பழசாய் போகாமலும் அவர்களை திரிசங்கு சொர்க்கத்தில் நிறுத்தியபோது

எஸ்தரிடம் மனோகர் கேட்டான். ‘ஒனக்கு எப்படி... ஹெச்.ஐ.வி. உள்ளே போச்சுது?” ‘விட்டுத்தள்டா... பையா... நீயும் பொம்மை, நானும் பொம்மை. நோ நோ நீயும் பாசிட்டிவ்... நானும் பாசிட்டிவ்... நினைத்துப் பார்த்தால் எல்லாமே பாசிட்டிவ்... அழாதடா!’

‘எனக்காக அழலடி. ஒனக்காக அழுகிறேன்”

‘பல்ல உடப்பேண்டா... எனக்காக யாராவது அழுதால், அவங்களை அழவைப்பேன். டோண்ட் பீல் பிட்டி பார் மீ”

‘சரி.டி... ஒன்னோட எய்ட்ஸ் ராமாயணத்தைச் சொல்லுடி'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/218&oldid=635661" இலிருந்து மீள்விக்கப்பட்டது