பக்கம்:பாலைப்புறா.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு.சமுத்திரம் 219

‘மொதல்ல... நீ ஒன்னோட எய்ட்ஸ் பாரதத்தை இன்னிக்காவது சொல்டாபையா!’

‘அது பெரிய கதை... அனுமான் வால் மாதிரி நீளும்... மொதல்ல ஒன்னதைச்சொல்லு. அப்புறம் நான் சொல்றேன்’

‘பிராமிஸ்...”

‘பிராமிஸ்ட்’

‘'சுருங்கச் சொல்லி விளங்க வைக்கேண்டா...தலைப்புச் செய்தியாவே சொல்றேன்டா... நடுத்தரக் குடும்பம்.அம்மாவுக்கு... கண்ணுக்குத் தெரியாத பெரிய வீடு. அப்பனுக்கு கண்ணுக்கு தெரிந்த சின்ன வீடு... பெரியவங்களோட குடுமி பிடிச்சண்டை... அண்ணன் தங்கை குஸ்தி... காலேஜ் படிப்பு... எவளோ ஒருத்தியோட பீடா நன்கொடை. ஆரம்பத்தில் ஒசி, அப்புறம்துட்டு. அதுக்காக வீட்டுத்திருட்டு. அப்புறம் தெருத்திருட்டு... அந்த பீடா இல்லாமல், செத்துப் போகணும் என்கிற தவிப்பு... அவளிடம் சரணாகதி. அப்புறம் வேலூரில் அவள் வீட்டில் வாசம்... பல புயல்களோட படுக்கை... ஒரு அயோக்கிய சமூகத் தொண்டு கும்பல், எனக்கு எய்ட்ஸ் இருக்கறதாய் பீடாக்காரிக்கிட்டே சொன்ன கோள்... அதனால வீட்டுக்கு வெளியேதுக்கிப் போடல்...அன்புமணி பொறுக்கி எடுத்தல்... இதுதாண்டா என்வாழ்க்கை...வாடா செத்துப் போயிடலாம்... அதுக்கு முன்னாடி ஒன் கதையைச்சொல்டா...’

‘சொல்றேன்...பாப்பா... சொல்றேன்... மேடம்... ஊமை ஊரைக் கெடுக்கும்... பெருச்சாளி வீட்டைக் கெடுக்குமுன்னு கேள்விப்பட்டு இருக்கியா...?”

“ஆமா கண்ணு...’

‘அந்த ஊரு... வெள்ளையன்பட்டி. அங்கே வீட்டைக் கெடுத்த பெருச்சாளி எங்கப்பன்... ஊரைக் கெடுத்த ஊமை யாரு...? நான்... நானே தான்...’

‘நேராவிஷயத்துக்கு வாடா’

‘வாரேன். வாரேண்டி. வாடாப்பூ முதல் ஆனந்திவரை நடந்த உடல் விளையாட்டை ஒப்பிக்கேண்டி’

மனோகர், எஸ்தரின் மடியில் தலையைப் புரட்டிப் போட்டான். அவள் கால் மேல் கால் போட்டான். கையைப் பின்புறமாய் வளைத்து, அவள் கழுத்தை வளைத்துப் பிடித்தான். அவனுக்கு, எஸ்தரின் மடி வாடாப் பூவானது... அவள் கழுத்து தேனம்மாவானது... வயிறு ஆனந்தியானது... மருந்துபோதை போனாலும், அதற்கு இணையான காதல் போதை... அவன் கண்களை கிறங்க வைத்தது. வாயைப் பேசவைத்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/219&oldid=635662" இலிருந்து மீள்விக்கப்பட்டது