பக்கம்:பாலைப்புறா.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 பாலைப்புறா

தேனம்மா, பக்கத்தில் வந்து நின்னாள்... நான், யதேச்சையாய்...’

‘நிறுத்துடா... ஒனக்கு எல்லாமே யதேச்சை. அந்தப் பொண்ணுக மட்டும் நினைச்சே வருவாளுங்க... இது ஆணதிக்கம்டா’

‘உச்சக்கட்டத்தில உச்சியை பிடிக்காதே! நான் தேனம்மாவை யதேச்சையாய்”

“இந்த வார்த்தைய சென்சார்பண்ணிட்டேன். சரி மேற்கொண்டு போ’

‘'நான், என்னை அறியாமலே... தேனம்மாவின் மோவாயைப் பிடித்துகெஞ்சினேன். வேறு யார்கிட்டயும் சொல்லிடாதேன்னு அழுங்குரலில் சொன்னேன். உடனே, அவள் அழுதாள். நான் பயந்து போய் விலகி நின்னேன்... தலைவலி, போய் திருகுவலி வந்திட்டேன்னு வெல வெலத்தேன். அவள் மெள்ளப் பேசினாள். அப்புறம் ஆவேசமாய்ப் பேசினாள். அவள் புருஷனும் இன்னொரு மாரியப்பனாம்... மூன்று மாதத்திற்கு ஒரு தடவை வந்து, முரட்டுத்தனமாபாய்வானாம்... மறுதடவை வரும் போது, உண்டாயிட்டியான்னு’ கேட்பானாம். இல்லன்னு இவள் தலையாட்டினால், போட்டு போட்டு அடிப்பானாம். மலடி... மலடின்னு திட்டுவானாம்... மொதல்ல ஒன்னை சோதித்துப்பாருன்னு ஒரு நாள் கேட்டபோது, எனக்கு பிறந்திருக்கிற பிள்ளைகளுக்கு... ஒரு பஞ்சாயத்து பள்ளிக்கூடமே நடத்தலாமுன்னு, சொல்லிச்சிரிச்சானாம். அடுத்த தடவை வரும் போது, நீ மட்டும் முழுகாட்டால், ஒரேடியாய் தலைமுழு கிடுவேன்னு விரட்டிட்டு போயிட்டானாம். தேனம்மா அழுதாள். அவன் கண்முன்னாலயே, ஒரு குழந்தை பெற்றுக் காட்டணுமுன்னாள். அவனுக்காக இல்லாட்டாலும் தனக்காகவாவது ஒரு பிள்ளை வேண்டும் என்று வெளிப்படையாவே சொன்னாள். அப்புறம் என்ன அடுத்த தடவை நான் ஊருக்குப் போகும் போது, அவளுக்கு ஒரு குழந்தை...நான்கு மாதக் குழந்தை... நோயாளிக் குழந்தை; பிறந்த ஏழாவது மாசமே இறந்துட்டு... இப்போதான் இறந்ததுக்குக் காரணம் புரியுது”

மனோகர், பேச்சை நிறுத்திவிட்டு, அண்ணாந்து பார்த்தான். உள்ளே மனதில் ஊடுருவிய சினிமாஸ்கோப்பில், முரட்டுக் கணவனால் அடிபடும் வாடாப்பூ பெற்ற பிள்ளையைப் பறிகொடுத்துட்டு, வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்ளும் தேனம்மா...

எஸ்தர், அவனை, தலையைப் பிடித்து உலுக்கினாள். தோளைத் தொட்டு குலுக்கினாள்... உடனே, மனோகர் மனத்திரையில் ஆனந்தி... அதே பம்ப் செட் அறை... அதை, காதல் செட் என்றே பெயரிடலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/224&oldid=635668" இலிருந்து மீள்விக்கப்பட்டது