336 பாலைப்புறா
அதுக்காக இப்படியா கேள்வி முறை இல்லாமல், முன் அறிவிப்பு கூட கொடுக்காமல், வருவது...?
கலைவாணி கேட்டாள்.
‘என்ன வேணும் சார்...?”
எதிர் நாற்காலிக்காரர்களில் வட்டமுகக்காரர், கலைவாணியையும், மற்றவர்களையும் ஏற இறங்கப்பார்த்தார். அந்தப்பகுதியில்தன்னைப் பார்த்த உடனேயே, பலர் பதறியடித்து எழும் போது, இவர்கள் பாராமுகமாய் இருப்பதும், இவள் அதட்டுவதுபோல் கேட்டதும், அவருக்கு ஆத்திரத்தைக் கொடுத்தது. சூடாகிவிட்டார்.
‘இந்த இடம் எத்தனை ஏக்கர்...?”
‘'எதுக்கு கேக்குறீங்க...?”
‘கேட்கப்படாதா? சும்மாச்சொல்லுங்க...”
‘இரண்டு ஏக்கர்...”
‘இந்த இடத்து பக்கத்துல ஒரு காலேஜ்கட்டப் போறாங்க தெரியுமா?”
‘தெரியுமாவது...? கேட்கிறதுக்கே சந்தோஷமாய் இருந்தது. கிராமத்து இளைஞர்களுக்கு குறிப்பா பெண்களுக்கு இது ஒரு வரப் பிரசாதம்...”
‘இப்படித்தான் பேசணும்... அதனால... ஒங்க இரண்டு ஏக்கரையும் வாங்கறதுன்னு தீர்மானித்திருக்கு...”
‘அங்கே... மடக்கிப் போட்டிருக்கிற இடத்தில நாலு காலேஜ் கட்டலாமே..?”
‘அதெல்லாம்... ஒங்களுக்கு அதிகப் பிரசங்கித்தனம். ஒங்க இடம் எங்களுக்கு வேணும். எவ்வளவு பணம் வேணும்...?”
அசோகனால், பொறுக்க முடியவில்லை.
‘என்ன சார்... அடாவடியாய் பேசுறீங்க... நாங்க விற்கத் தீர்மானிச் சிட்டதாய் நீங்களே தீர்மானித்தால் எப்படி...? நீங்க கோடி ரூபாய் கொடுத்தாலும், நாங்க இந்த இடத்தை கொடுக்கிறதாய் இல்லே...”
“யார் கிட்ட பேசுறோமுன்னு தெரியுமா...? டாக்டருங்களுக்கு, நாட்டு நடப்பு தெரியாது என்கிறது சரியாத்தான் இருக்குது'