பக்கம்:பாலைப்புறா.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

350 பாலைப்புறா

‘ ஆனாலும், நான் நிசமாவே மனுவி என்கிறதை நீதான் நிரூபிச்சுக் காட்டணும்’

‘எப்படி... ?”

‘நீ என் கூடவே இருக்கணும். இனிமேல் ஒனக்கு அந்தத் தொழில் வேண்டாம்...’

‘கலை... கலை... நான் மோசமானவள்...’

‘இல்ல. நீ மோசமாக்கப்பட்டவள். மோசடிக்குள் சிக்கியவள்...”

‘சக்களத்தியா... கூப்புடுறியா...?”

‘அடிப்போடி.. நமக்கு வாழ்க்கைத்தான்சக்களத்தி, வம்புக்கு இழுக்கிற எய்ட்ஸ் கிருமிகள்தான்சின்னச்சக்களத்தி’

‘வாணாண்டி... என்னோட ஒன்னை சேர்க்காதே...’

‘அப்போ ஒன்னோட என்னை சேர்த்துக்கோ’

மேட்டில் நின்ற கலைவாணி, பள்ளத்தில் நின்ற எஸ்தரை நோக்கி வலது கரத்தை சரித்து நீட்டுகிறாள்... எஸ்தர், அதைப் பற்றிக் கொள்ளுகிறாள். கையைப் பற்றியவள், கை கொடுத்தவளை, கீழே இழுத்தடிக்காமலே, மேட்டுக்கு வருகிறாள்...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/350&oldid=635809" இலிருந்து மீள்விக்கப்பட்டது