பக்கம்:பாலைப்புறா.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் 79

டாக்டர் முஸ்தபா, மேலும் அவளை அழ வைத்தார்.

"அந்த இளைஞனாவது தற்கொலை பண்ணிக்கிட்டான். ஆனால் இந்த மனோகரோட மச்சான்....ஒங்களை ஒரே சீவாய் சீவப்போறதாய் குதிக்கிறார். எதிரிக்கு, நேரம், இடத்தைச் சொல்லிட்டு, அரிவாளை தூக்குகிற மனிதர். ஒ.கே. ஓ.கே. அழாதிங்க... நீங்க என்னோட சக டாக்டர். ஒரு டாக்டர், இன்னொரு டாக்டரை, அவர் நோயாளியை கொலை செய்தாலும், விட்டுக் கொடுக்கப்படாது என்பது நமது எழுதப்படாத மெடிக்கல் தர்மம். இப்பக் கூட குடி முழுகிடல... விஷயத்தை இதோட விட்டால்... ஒங்களை விட்டு வைக்கிறதாய் மோகன்ராம்... எனக்கு வாக்கு கொடுத்திருக்கார்.ஒங்ககிட்டே, ரெண்டுல ஒன்று கேட்டுட்டு வரச் சொன்னார். நீங்க இனிமேல் மனோகர் கல்யாண விஷயத்தில் தலையிட மாட்டிங்கன்னு சொன்னதாய் சொல்லட்டுமா? நான் வற்புறுத்தல... ஒங்க இஷ்டம்... நீங்க கல்யாணத்திலயும் நாலு பேரைப் போல கலந்துக்குவீங்கன்னும் சொல்லட்டுமா...!”

டாக்டர் சந்திரா, யந்திரமாய் தலையாட்டினாள்... பக்கவாட்டில்; அல்ல முன்னாலும். பின்னாலுமாய்!

டாக்டர் முஸ்தபா, அவளை இளக்காரமாகப் பார்த்துவிட்டு, கதவைத் திறந்தார்.. டாக்டர் சந்திராவுக்காக, குழந்தைகளோடு காத்திருந்த வேட்டையன்பட்டி பெண்களை விரட்டியடித்தபடியே பீடு நடைபோட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/79&oldid=1405059" இலிருந்து மீள்விக்கப்பட்டது