பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 1.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21 22 34 நரிச் செயல்! மொழி நலமும் இனநலமும் காவாதார் தமிழ் காப்போம் எனமு ழங்கல் குழிமுயலைக் காப்பமெனக் கோளரிபால் நரிகொண்டு சேர்த்தல் ஒக்கும்; பழி சேர்க்கும் செந்தமிழ்க்கு: தமிழகத்தைப் பகைவரின்கைக் கொண்டு சேர்க்கும். விழி சோர்தல் இல்லாது தமிழரெல்லாம் வியன்றமிழைக் காத்தல் செய்வீர்! - 1963 மொழிப்போர் புரி! மொழிப்போர் புரி! செழிப்பாந் தமிழ் மொழிப்பால் குடிப்பாய்!-இனிப் பழிப்பார் உனை அழிப்பார் பினை; விழிப்பாய் தமிழா! அறப்போர் புரி! சிறப்பாந் தமிழ் மறப்போர் புரிவாய்!-உயிர் துறப்பார்க் கினிப் பிறப்பார் வயின் இறப்பே தடடா! சிறுத்தாய் என ஒறுத்தார்; துயர் பொறுத்தாய் பலநாள்!-உயர்(வு) அறுத்தார்; குரல் மறுத்தார்; நிலை நிறுத்தாய் நெடுந்தோள்! * - 1963