பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

87

வெள்ளிப் பணத்தை வீசுவ தாலே குள்ளச் செய்கைக்கு யாவரும் குனிவர் f 90 என்பதற் காகப் பண்பை இழப்பதா?

அன்புதான் எதற்கு மேற் றறிவுதான் எதற்கு? பண்புதான் என்ன? பணமே பயனா? பெண்மை திரிந்திடில் ஆண்மை பிழைக்குமா?

காதல் என்றொரு தூய உணர்வினை ஒதல் நல்லதோ உணர்தல் நல்லதோ?

இடையிலும் மார்பிலும் இணைவதோ காதல்?, தொடையிலும் வயிற்றிலும் தெரிவதோ காதல்? கற்பனை இல்லாக் கயவோர் தம்கதை விற்பனை யாகிடச் செய்யும் விரகிது! - - 200

கோப்பையில் குடிபுகும் கூவத்துப் பாவலன் ஏப்பம் விட்ட வாடையில் எழுதும் ஒற்றை வரிக்கே ஒருநூறு என்றால் - அற்றைப் புலவரின் அழியா இலக்கியப் பாடலுக் கெத்தனைக் கோடி படைப்பது? ஊடலும் கூடலும் அவற்றில் இல்லையா?

புதுவைப் புலவன், புரட்சிப் பாவலன் எதனைப் பற்றி எழுதிட வில்லை? காதலைப் பற்றி உரையாக் கருத்தெது: தீதாய் ஒருவரி தேர முடியுமோ? 210

பெண்மையின் மறைவைப் பிட்டுக் காட்டுதல் பெண்மையின் சிறப்பை மண்ணிட்டுப் புதைக்கும்! காமப் புனலுள் நீச்சல் கற்றவன் : - ஏமக் காதல்ை விளம்புதல் எப்படி? ‘. . . . . தெருக்கூத்துக் கோமாளி திரைப்படம் நுழைந்தால் ஒருகூத்துக் கொருகூத்து ஒப்பாரி! ஆலோலம்: '

"சுசீலா என்றொரு குயிலிசைக் குரலியை மசாலைப் பாடல்கள் பாடச் செய்வது குழலினால் மலத்தைக் குழைப்பது போலாம்!