பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

கணிச்சாறு இரண்டாம் தொகுதி

பழகு தமிழிசைப் பாடலைப் பாடினால் 220 எத்தனைத் தமிழ் உளம் இன்பத்தில் மிதக்கும்? எத்தனைத் தாழ்வுளம் இதனால் உயரும்? - 'தமிழுக்கும் அமுதென்று பேர்’ எனும் பாடலைக் கமழக் கமழக் கேளாத செவிஎது? -

'செளந்தர ராசனை’ திரைப்பட இழிஞர்

எந்தப் பாடலைப் பாடச் செய்வது? இழுப்பு வந்தவன் இசைபோல் இழுத்திடும் மழுக்குடைப் பாட்டையா பாடச் செய்வது? பணம் வரும் என்று, இப்பாடகர் தாமும் பினவுநாய் ஊளைபோல் முக்கித் தீர்ப்பதா? 230

'எலந்தப் பயம் எனும் பாடலைப், பெண்மை நலந்தவிர் ஒருத்தி நடுத்தெரு வினிலே பாடியும் ஆடியும் பழம்விற் பதுபோல் ஒடும் திரைப்படக் காட்சி ஒன்றிலே வெறுப்புற - பெண்கள் வெட்க முறும்படி உறுப்புகள் காட்டி அருவருப் பாகத் தோன்றிய தன்மையில் வெளிநாடு தோற்றது! கான்றுமிழ் கின்ற அக் காட்சிக் காகவும் பண்பி லாஅப் பாட்டிற் காகவும் * . . . " எண்ணிலா இளையோர் பன்முறை பார்த்தனர்! 240 பெண்டிரைத் தாழ்த்திடும் பண்பிலாக் காட்சியால் மண்டிய செல்வம் சுரண்டிடும் கயமை நாளுக்கு நாளாய் நந்தமி ழகத்தில் வாளுக்கு நஞ்சுபோல் வளர்ந்திட லானதே!

பார்க்க வருகிறார் என்பதால் பண்பினைத் துர்க்க முயல்வதோ தொலைக்க முனைவதோ: "பார்க்க விழைகின்றார்" என்பதும் பழுதுரை! ஆர்த்த பழங்காலத் திரைப்பட இசைகளைக் கேட்டு மகிழாத செவிகள் இருக்குமா? ஆட்டமும் கூத்தும் அவற்றில் இல்லையா? 250 கதைகள் இல்லையா? காட்சிகள் கொஞ்சமா? புதைந்த கருத்துகள் எத்தனை? எத்தனை?