பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

திருவள்ளுவர் விழாவா..?

திருக்குறள் பிறந்திரண் டாயிர மாண்டுகள். சென்றன; எனினும் செந் தமிழா, -

இருக்குமுன் நிலையினில் இமிஉயர்ந் தனையா?

இழிவிலை யா:உடல் சிமிழா?

பிறப்பினில் உயர்வுதாழ் வொழிந்ததா?அடஒய்! பேசினை எழுதினை விறைப்பாய்! மறப்பிலை தம்பி,உன் மடத்தனம், கயமை மற்றெதற் கோ விழா, சிறப்பாய்?

பசியொழித் தனையா? பிணியொழித் தனையா? பகைப்புலம் வேரறுத் தனையா? வசிக்கவும் குடிலிலா வாடுவோர் தமக்கே வாழ்விலை உயிரென்ன தினையா?

ஏய்ப்பவர் ஒருபால் மேய்ப்பவர் ஒருபால்; ஏழையர் துடித்தனர் அவர் பால் - காய்ப்பதிங் கொருபால்! கனிவதிங் கொருபால் காய்பவர் பெறுவதிங் கெவர்பால்? சொல்லுதல் எளிது; செய்தலே உயர்வெனச் சொல்லிற் றட்ா, நம் முப்பால்! - வெல்லுநாள் அன்றோ விழாக்கொண் டாட்டம் ! வினையடா, விளைவடா இப்பால்!

- 1968