பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59

šs

அன்புத் தமிழனே!

அன்புத் தமிழனே அடிமைப் பிறவியே! என்பு நெகிழ இதை உரைக் கின்றேன்; - சற்றே உன்செவி சாய்த்துக் கேட்பாய், - முற்றும் எண்ணுவாய் முடிவொன்று காண்பாய்!

எத்தனைக் காலம் நீ இழிந்து கிடப்பது? புத்தனைக் கண்டாய், ஏசுவைப் பற்றினாய்! சிவனியம் புகுந்தாய்; மாலியந் தழுவினாய்!. மொட்டைத் தலைக்கொரு மூடு கவிழ்த்து முகமதி யன்என முழுப்பெயர் மாற்றினாய்! ஊர்விட் டோடினாய்; உலகெலாம் பரந்தாய்; மலையமும் இலங்கையும் நிலையிலா தோடினாய்! அலையா யலைந்தாய், ஆக்கமுந் தேடினாய்.

ஆயினும் நீயோர் ஆரிய அடிமையே! நாயினும் புழுவினும் நலியும் பிறவியே! முழுமையாய் நீஒரு மூடக் களஞ்சியம். பழமைச் சடங்கின் குப்பைக் குழி நீ!

வெள்ளைக் காரனின் விளங்கிய அறிவு: கொள்ளை கொள்ளையாய்க் குவிதலைக் கண்டும் - மண்ணிலும் விண்ணிலும் மற்றைய துறையிலும் திண்ணிய ஆய்வினில் தேர்ந்ததை அறிந்தும் உன்னை ஒருபடி உயர்த்திக்கொள்ள எண்ணம் இன்றி இருக்கின் றாயே!

இன்னமும் பார்ப்பான் எழுதிய பொய்யையும் பின்னி யுரைத்த புராணப் புளுகையும் - உண்மை என்றே உளமார நம்பிப் பொன்னையும் பொருளையும் கொட்டிக் கொடுப்பாய்! பார்ப்பான் காலில் பதவிக்கு விழுவாய்; ஊர்க்குள் அவனையே உயர்த்தி என்கிறாய்! குலச்செருக் கின்னும் குலைந்திட வில்லை. பலவேறு சமயமும் உனைப்பாழ் படுத்திடும். உள்ளத் திறைவனை ஒப்பாது, பார்ப்பான். கள்ளத்துத் தோற்றிய கயவருக் கெல்லாம்