இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பாவலரேறு பெருஞ்சித்திரனார்
60
99
படிவம் சமைத்து, விழாப்பல வெடுப்பாய்! விடிவிலா இருளுள் விழுந்து கிடப்பாய்! இனமும் மொழியும் வழியும் கெட்டு மனமும் கெட்டு மழுங்கினாய் தமிழா! இனியா கிலும்விழி, இழிவை அகற்று! பணியும் மழையும் வெயிலும் பாராது கடமையைச் செய்நீ! மடமையை உதறு: உடைமையை நீபெறும் நாளுமொன் றுண்டே!
- 1969
விடுதலை பிறக்கும்!
வடவர்க்கும் பார்ப்பனர்க்கும் வால்பிடித்தே -
வாழுகின்ற நிலையைப் பெற்றே
படநிற்கும் நெடுமரம்போல் பாயிழந்த மரக்கலம்போல் பற்றி ழந்தே கெடநிற்கும். தமிழா,உன் கீழ்மையினைக் இன்றுணர்ந்து:கிளர்வா யானால், தொடதிற்கும். பெருந்துயரும் தூளாகும். விடுதலையும் தோன்றும் அன்றே!
-1969