பாவலரேறு பெருஞ்சித்திரனார்
தொகையைக் கொண்டு கனிச்சாறு முத்தொகுதிகளும் முதற் பதிப்பு அச்சிட்டு வெளியிடப்பெற்றது.
நூல் அச்சீட்டின் முடிவிலும் அதன் பின்னருமாகத் திரு. மறை. நித்தலின்பனார், பேரா. வி. இராசமாணிக்கனார், திரு. தமிழ்மகன், பேரா. கு.வெ.கி. ஆசான் ஆகியோர்க்கு நூலாகவும் தொகையாகவும் அப்பங்குகள் திருப்பப்பெற்றன. ஏனையோர் தம் பங்குத் தொகை அவர்கள் சொற்படி நன்கொடையாக ஏற்கப் பெற்றன.
இனி, தமிழ்மக்கள் தம் மொழிநலத்தையும் வாழ்வியற் சிறப்புகள் சீரழிவுகள் ஆகியவற்றையும் உணர்ந்து, அறிவிலும் ஆற்றலிலும் உயர்ந்து, எழுச்சிபெற்று, இனநலம் பேணி, நாட்டுரிமை பெற்று வாழ்வாங்கு வாழ வகைசெய்யும் கருத்துத் தெளிவும் உணர்வுச் செழுமையும் வாய்ந்த பாடல் திரட்டான இக் கனிச்சாறு - தொகுதிகளைத் தமிழ்கூறும் நல்லுலகம் வரவேற்றுப் பயன்கொண்டு சிறக்கும் என்று நம்புகின்றோம்.
- தென்மொழி நூல் வெளியிட்டகத்தினர்