பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

430

கணிச்சாறு இரண்டாம் தொகுதி

தீட்டுகின்ற மரத்தினிலே கத்தியின்கூர் தேர்ந்திடுஞ்செய் நன்றி யின்மை கூட்டுணர்வைக் குலைத்துவிடும்; இரண்டகத்தைக் குருத்தவிழ்க்கும்; கூம்பச் செய்யும்: காட்டுகின்ற நன்றியள வாமுயர்வு; நன்றியற்றார் உய்தல் இல்லை.

பூட்டுகின்ற வாயினராய் அவரவர்தம் புலமையினைப் பொலியச் செய்க!

எக்காலும் எல்லாரும் ஒன்றிணைதல் எனுங்கொள்கை இயற்கை யில்லை; திக்காலுக் கொன்றிரண்டாய்த் திரிபவரை இணைக்குங்கால் தெரியும் உண்மை! சுக்காலும் மிளகாலும் காரங்கள் தனித்தனியாம்; சுள்ளி வேறாம்! முக்காலோ அரைக்காலோ முடிந்தமிட்டும் இணைந்தவரை முனையச் செய்க! .

நமக்கொருகால் வாய்ப்புளதென் றொருமுதுகில் நாட்டியவாள் நம்மோர் வாங்கித் - - - - * தமக்கெருவாய் நம்முதுகில் தைக்கின்ற நாள்வரவும் தயங்கி டாது! ) . . . . . கமுக்கமொடு செயுந்தீங்கும் வெளிப்படுதல் காலத்தால் கனியுஞ் செய்கை ! , நமக்குள்தாம் புறம்பேசித் தாழ்ந்திழியின் இனப்பகைதான் நலிவ தெங்கே?

குன்றியள வெண்ணியதும் குன்றளவாய்ச் செய்தவர்போல் கூறு வாரும், நன்றியறி வின்றித்தாம் ஏறிவந்த அடிமரத்தை நறுக்கு வாரும், - மன்றினிலே நிமிர்ந்துரைக்கத் திறனின்றி மறைவினிலே மழுப்பு வாரும், இன்றினியும் தமிழினத்தில் லிருக்குமட்டும் எந்தமிழர்க் கேற்றம் இல்லை.

- 1973