பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78.

131

தமிழர்க்கு விடிவுண்டு!

பார்ப்பனர் நால்வர் சேர்ந்தால் பகை.பூசல், பொறாமை மற்றும் ஆர்ப்பரிப் பெதுவு மின்றி, அவரின வேர்க்குள் நீரை வார்ப்பதெப் படி என் னென்ன வழிவகை? தமிழி னத்தைத் துார்ப்பதெப் படி ? - என் றெல்லாம் எண்ணுவார்; துணையும் காண்பார்:

அந்தோ! இவ்வுலகில் உள்ள அனைவர்க்கும் மூத்த தாம் நம் செந்தமிழ் இனத்தில் நால்வர் சேர்ந்திடில், தமக்குள் தாமே கொந்துதல், குடைதல், குத்தல், குழிபறித் திடுதல் - எல்லாம் சந்தையில் நடப்ப தைப்ப்ோல் சடுதியில் நடந்து போகும்!

ஒருவனை ஒருவன் ஏய்ப்பான்; ஒருவனை ஒருவன் சாய்ப்பான்; உருவாகித் திரளும் போழ்தில் ஒருவனை ஒருவன் மாய்ப்பான்! குருவினை முதுகில் குத்தி. மாணவன் குடைந்து பார்ப்பான்! எருவெனப் பயனா கின்ற: ஒருவனை இணைந்தெ திர்ப்பான்!

தமிழின இளைஞர் கூட்டம்(தப்பில்லை நானு ரைத்தல்) உமியினம்! பயனே யின்றி. ஊர்சுற்றும்; தெருக்கள் சுற்றும்! திமிலெனத் தோற்றம்! ஆனால் தென்பில்லை; ஊற்ற மில்லை! இமியள வேனும் நம்மின் இனம்பற்றிக் கவலை யில்லை!