பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

甘36

சாதிப் புழுக்கள் நெளிந்திடும் சாணித் திரளைகள் நாம்!

எங்குப் பிறப்பினும் வாழினும் என்னினம் ஏற்றமுற் றுய்யவே வேண்டுவேன்! - ஒரு தங்கச் சிலையினைக் காப்பதுபோல் தமிழ்த் தாயினைக் காக்கவே தூண்டுவேன்! வங்கக் கடலினைத் தாண்டினும் மேற்றிசை வானைக் கடந்துநாம் வாழினும் - புகழ் மங்கச் செயுங்குலத் தாழ்ச்சியை என்னினம் மண்ணிற் புதைத்திடக் கேட்குவேன்!

செந்தமிழ்த் தாய்பெற்ற பிள்ளைகள் நாம்;ஒரு சேரப் பழுத்த பழக்குலை! - இதில் எந்தப் பழத்தை உயர்வென்று சொல்வது? எதனை இழிவெனக் கொள்வது? முந்தப் பெறும்பல பேரினங்கள் இந்த முதுமை நிலத்தினில் வாழ்கையில் - நாம் கொந்திப் பிடுங்கிடும் தாழ்ச்சி யுயர்ச்சியால் குலங்குல மாய்மனங் காய்வதோ? - -

வேற்றுப் புலத்திடை வாழவந் தோம்;உயர். விண்ணை - கடல்களை நீந்தினோம்! - நிலந் துாற்றப் பெறுங்குலத் தாழ்ச்சி உயர்ச்சியின் தொல்லைகள் நீந்தத் தயங்குவோம்! மாற்றப்பெறும் புதுத் தோற்றங்கள் பார்க்கிறோம்; மற்றும் பொதுமைகள் காண்கிறோம்! - உயிர் ஊற்றை - உடலினைத் தாழ்வுசொலும், இழி

வுள்ளச் சிறுமைகள் சேர்க்கிறோம்!

வானென ஓங்கிடும் கட்டிடங் கள்,பல வாழ்க்கைப் புதுமைகள் செய்கிறோம்! - விண் மீனெனப் பூத்த உயிர்களிடையே,கீழ் - மேலென வேற்றுமை பெய்கிறோம்! தானுயர் வென்றிடும் சாதிகளும் ஒன்றிற் றாழ்ந்த நிலைக்கொன்று தாழ்கையில் - தாழ்வு ஏனெனக் கேட்க நடுங்கிடு வோம்;அறி ஆக்கமி லாதவோர் தன்மையால்!