பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83

138

செங்கதிர் புலர்ந்தது. செந்தமிழ் வானில்!

எங்கும் தமிழர்கள் ஒன்றாய் இணைந்தனர்! இன்னுயிர் உடல் - என நன்றாய்ப் பிணைந்தனர்! 'பொங்கும் உணர்வினால் மொழியையும் இனத்தையும் புதுக்கினர் - என்றே கொட்டடா முரசம்! பூத்தது வாழ்வெனக் கொட்டடா முரசம்!

உண்மைத் தமிழர்கள் உலகெலாம் பரந்தனர்! ஒண்டமிழ்த் தாயினை உலாவர விட்டனர்! திண்மை உளத்தொடு தீந்தமிழ் பரப்பினர்! தீமைகள் அகன்றவென் றுதடா சங்கம்! தீய்ந்தது மடமையென்றுதடா சங்கம்!

முன்னைத் தமிழர்கள் மொய்த்தனர் நாடெல்லாம்; முங்கிய பழமைகள் முகிழ்த்தன. புதுமையாய்! அன்னைத் தமிழ்மொழி உலகெலாம் ஆர்ந்திட அலர்ந்தது பொழுதென - அறையடா முழவம்! அகன்றது பகையென - அறையடா முழவம் !

கீழ்த்திசை நாடுகள் கிளர்ந்தன தமிழால்! கிளைத்தது தமிழ்க்குலம்; தீய்ந்தது கீழ்மை! வாழ்த்திசை அளாவி எழுந்தது வானில்; வளர்ந்தது தமிழென - மிழற்றடா யாழை! வாழ்ந்தது நிலமென - மிழற்றடா யாழை!

செங்கதிர் புலர்ந்தது செந்தமிழ் வானில் செறிந்தனர் உலகெலாம் சேரபாண் டியனார் எங்கணும் சோழனின் இனம்படை கொண்டது! எந்தமிழ் வாழ்ந்ததென் றியம்படா குழலில்! ஏர்ந்தனர் தமிழரென் றியம்படா குழலில்!

- 1974