பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

85

139

அடிப்படையை விளைவிக்க

ஊருக்கொன் றாய்ச்சிலையை ஊன்றுதலால், விழாக்களினால், உலகம்காண்த் தேருக்குள் அமர்ந்த வண்ணத் தோரணங்கள் தலையிடிக்குந் தெருவலத்தால், ஆருக்கிங் கென்னபயன்? எத்தனையாண் டவைநிற்கும்? ஆக்கங்காணும் வேருக்குள் அன்றோநீர் விடல்வேண்டும்! அடிப்படையை விளைத்தல் வேண்டும்!

பார்ப்பனரைக் குறைகூறிப் பயனில்லை; நம்மவர்கள் பரந்து செய்யும் ஆர்ப்பாட்டம் மிகப்பெரிதே! அளப்புகளோ இனும்பெரிதே! அறியா மைக்குள் . . . போர்ப்பாட்டும் புகழ்ப்பாட்டும் பாடுவதால். பயன்வருமோ? பொதுமை நாடும் - ஊர்ப்பாட்டுக் காரரெல்லாம் உளப்பாட்டோ டுண்மையராய் உழைத்தல் வேண்டும்!

- 1974

ஏற்றம் புதுக்கிட ಎr@ುಹGT!

தண்டமிழ்த் தாய்பெறும் துன்பத்தினும், பெற்ற தாயின் துயரம் மிகப்பெரிதோ? - நில மண்டில மெங்கனும் வாழ்ந்தவள்தான் - இன்று வாழ்க்கை மெலிந்துடல் சோர்ந்துவிட்டாள்! " அமிழ்தமெ னுந்தமிழ் வாய்மொழி யைவிட அன்னையின் வாய்ச்சொல் இனிப்பதுண்டோ? - செங்

குமுதஇ தழ்த்தமிழ் வாய்திறந்தால் - ஒரு கோடி நரம்பும் சிலிர்க்காவோ?