பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

tá3

"உழைப்பே இருக்கும்;

உறக்கம் இராது! மழைக்கும் வெயிற்கும் மனந்தயங் காமல் அழைக்கும் பணிக்குள் அமிழ்ந்திடல் வேண்டும்! பிழைப்பெலாம் செந்தமிழ்ப் பிழைப்புதான்!” - என்றே, "என்தமிழ் நாட்டிற்கும் இனத்திற்கும் மொழிக்கும் என்னுயிர் உடல்பொருள் ஈவேன்' என்று,என் முன்வந்த ஒருவர்க்கு முழுதும் விளக்கினேன்! மின்வந்த கண்ணினால் மேல்கீழ் நோக்கியே, பின்வந்து பார்ப்பதாய்ப் பேசிச்சென் றாரே!

"இகழ்ச்சிகள் இருக்கும்; ஏச்சுகள் வருத்தும் புகழ்ச்சி வாய் உரைதான்! புல்லியர் இடர்க்கு நெகிழ்ச்சி, கூடாது! நிலைத்திடல் அரிது! மகிழ்ச்சி என்பதே தமிழின் மலர்ச்சிதான்!”

- என்று வருகிறீர்?' என்றே என்தமிழ்த் தொண்டுக்குத் துணையாய்த் துணிந்துவந் தவர்க்கு நன்று விளக்கினேன்;"நல்லதென் மனைவிபாற் சென்று கலந்து வருவேன்' - எனச் சென்றவர்

இன்று வரையிலும் எதிர்வர, வில்லையே!

- 1975