பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

甘4

173

புதுமைக் கனவுகள்!

அடக்கி ஒடுக்கிடப் பட்டநந் தமிழினம் ஆட்சி அமைத்திடுமா - இனி மீட்சி கிடைத்திடுமா - முன் முடக்கிக் கிடந்திடும் வாழ்வின் உரிமைகள் மீண்டும் முளைத்திடுமா - இனி - மேலுங் கிளைத்திடுமா?

தொடக்கப் பெருமைகள் சீர்மைகள் வந்துநம் தொன்மை சிற்ந்திடுமா - உள - வன்ம்ை பிறந்திடுமா -பெருந் - தடக்குன்றத் தோள்கள் எழுந்துநின்றே நம்மின் தாழ்ச்சி விலக்கிடுமா - பகை சூழ்ச்சி துலக்கிடுமா?

ஒடுங்கிக் கிடந்திடும் செந்தமிழ்த் தாயினம் ஒற்றுமை யுற்றிடுமா - தனி ஊராண்மை பெற்றிடுமா - உயிர் நடுங்கிக் குலைந்திடும் வாழ்க்கை நலன்களும் நன்கு வளர்ந்திடுமா - புகழ் நாடிக் கிளர்ந்திடுமா? -

ஓங்கிப் பெருகிடும் மேன்மைச் சிறப்புகள் உள்ளம் மலர்ந்திடுமா - மனக் கள்ளம் உலர்ந்திடுமா? . தேங்கிக் குமிழ்த்திடும் அறிவுமுன் னேற்றங்கள் தேவை நிறைத்திடுமா - இனத் தீமை மறைத்திடுமா?

- 1981