பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

115

174

பற்றி எரியட்டும் தீ.

எடுப்பு

பற்றி எரியட்டும் தீ கொடும் பார்ப்பனர் நஞ்சைப் பரப்பிய நூல்களில் பற்றி எரியட்டும் தீ!

தொடுப்பு சுற்றி எரியட்டும் சூழ்ந்தே எரியட்டும்! சூழ்ச்சிகள் வஞ்சங்கள் தாழ்ச்சியின் நூல்களில் (பற்றி)

முடிப்பு. மக்களை வேறு பிரித்தனவாம், அவை மடமை வளர்த்தனவாம் - ஒரு திக்குத் தெரியாமல் மூடமுட் காட்டிலே திரிய வைத்தனவாம்.அதனால் - (பற்றி

சிந்தனை கொன்றன. வாம்;உயர் வாழ்வினைச்

சீர ழித்தனவாம் - ஒரு மந்த நினைவினை மயக்க உணர்வினை மனத்தில் வளர்த்தன வாம்! - அதனால் (பற்றி)

மெய்ம்மையைத் தின்றன. வாம்,நல்ல வாழ்க்கையின்

மேன்மை யழித்தனவாம்! - பெரும் பொய்மை பரப்பின வாம்; தமிழ் மக்களின்

பூண்டை அறுத்தனவாம்! - அதனால் (பற்றி)

பண்பை உறிஞ்சின வாம்;நமை யே, இழி பள்ளத்தில் தள்ளினவாம் - நறுந் தண்புகழ் சேரும் இலக்கிய நூல்களைத் தாவி யழித்தனவாம்! - அதனால், (பற்றி)

ஆட்சியைச் சாய்த்தன வாம்:தமி ழர்களின் ஆளுமை போக்கினவாம் - மொழி மாட்சியை நீக்கி வடமொழி ஊக்கி, நம் - மானத்தை வாங்கினவாம்! - அதனால், - (பற்றி)