பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

175

நாடு சிதைத்தன வாம்.நமை யேபெரும்

நாயகம் செய்தனவாம் - தமிழ்ப் பீடு குலைத்திழி சூத்திரர் என்றொரு பெயரைத் தந்தனவாம்! - அதனால், (பற்றி)

பெண்களைத் தாழ்த்தின வாம்;அருந் தாய்த்தமிழ்ப் பேற்றை யிழித்தனவாம்! - இரு கண்களை யும்குரு டாக்கி அறியாமைக் கங்குலில் வீழ்த்தின வாம்! - அதனால், (பற்றி)

வேதம் மனுஇதி, காசபு ராணங்கள் மேவும்பல நூல்கள்என வேதியர் ஒதின யாவுமே தீமைகள்! வெம்மைக் கொடுந் தேள்கள்! - அதனால், (பற்றி)

- 1981