பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f{6

誓创

செந்தமிழர் இறுதிநிலை!

செந்தமிழை எண்ணிச் செயற்படுக! செந்தமிழர் வந்தவர லாறெண்ணி வந்திணைக!

வந்தவர்கள் - " - சொந்தநலம் தாம்துறக்க! சோர்வின்றிச் சூழ்ந்தியங்கி s நொந்தநிலை நீக்கிடுக, நோன்று!

நாட்டுநிலை சிந்திக்க! நந்தமிழ்க்கு வந்துற்ற கேட்டுநிலை போக்கக் கிளர்ந்தெழுக! கேண்மையினால் r - ஏட்டுநிலை பேச்சு நிலை எல்லாம் துலக்கிடுக! - வேட்டுநிலை வேண்டெனினும் வேட்டு!

ஈதுகாண் செந்தமிழர்க் கேய்ந்த இறுதி நிலை! தீதுகாண் பின்னைத் தேறோமேல்! தேறுவமேல் சூதுகாண் நீங்கும்! சொந்தநில வாழ்வெஞ்சும்! ஏதுகாண் மற்றிங் கினம்!

- 1982