பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62.

63.

64.

65.

66.

67.

68.

69,

70.

72.

கணிச்சாறு இரண்டாம் தொகுதி

ஆரியப் பார்ப்பனர்கள் இனிமேலாகிலும் தமிழினத்தை ஏமாற்றுவதை விட்டு விட்டு இணைந்து வாழவேண்டும் என்று அவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறது இப்பாடல்.

பெரியார் ஈ. வே. இரா. நடத்திய கருவறைப் போராட்டத்தின்பொழுது பாடியது இது. அலங்கோல எழுத்தாளர்களும் வினுரை மேடைப் பேச்சாளர்களும் தமிழகத்தில் நிறைந்துவிட்டனர். அவருள் உண்மையானவர்களைக் காண்பதரிது. ஏக்கம் பாட்டில் ஊடுருவி நிற்கிறது.

பொய் எவ்வளவில் ஆரவாரம்கொண்டு அரசோச்சினாலும் அஃது அழியவே அழியும் என்றும், மெய் எவ்வளவில் அமைவாக இருந்தாலும் அது வாழவே வாழும் என்றும் இப்பாடலில் உணர்த்தப் பெறுகிறது.

காலம் எவ்வளவோ முன்னேறிவிட்டது. தமிழர்கள் இலக்கிய ஆட்சியிலும் பிற உரைநூல்கள் எழுதுவதிலும் மிகவும் பின்தங்கிக் கிடக்கின்றனர். அவர்களை ஊக்குவிக்க ஒரு பாட்டு, . . . " -

தலைவர்கள் மக்களின் உயர்வுக்காக எத்தனையோ வகைகளில் பாடுபடுகின்றனர்; கூக்குரலிடுகின்றனர். ஆனால் நாட்டில் தாம் எத்தனை கயமை நிலைகள், ஏமாற்றுப் பேச்சுகள், குல சமயப் பூசல்கள்?

அயல்நாட்டில் வாழ்கின்ற தமிழர்களுக்கு இந்நாட்டிலிருக்கும் இழிவு நிலைகளைக் கூறி, அவர்களாவது தமிழ்மொழியையும் தமிழ் இன. நலத்தையும், தமிழ்ப் பண்பாட்டையும் காத்துக் கொண்டு வாழவேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கின்றது. இப்பாடல். சிங்கப்பூரில் நடக்கும் 'உரிமை முழக்கம்' என்னும் தாளிகையில் வெளிவந்தது.

வெறும் வியப்புக் குறிகளையும் கேள்விக் குறிகளையும் 5ಣ6ುಲLTಹಹ கொண்ட பாட்டு இது. தமிழகத்தில் காணப்படும் நேர் முரணான சில நிலைகளை எடுத்துக் கூறி வியப்பும், இனி என்ன ஆகுமோ என்று வினாவும் எழுப்புகிற வகையில் அமைந்த பாடல். - தமிழகம் ஒருநாள் கட்டாயம் தனித்தமிழரசை அமைத்தே தீரும்; அதற்குரிய முரசொலிப்பு இது. - - ஏழு கோடித் தமிழர்களிடையே எண்பது கோடிப்போக்குகள் இருக்கின்றன. அனைவரும் அறிஞர்கள் என்கின்றனர் தங்களைத் தலைவர்கள் என்று கூறிப் பெருமிதப்பட்டுக் கொள்கின்றனர். இவர்களுள் யார்தாம் தொண்டர்களோ தெரியவில்லை. இதை விளக்குகின்றது இப்பாட்டு 1972இல் நடந்த பொதுத்தேர்தலில் அக்கால் தமிழர் நலன்களுக்குச் சார்பாகவிருந்த அருட்செல்வர்(கருணாநிதி ஆட்சியைக் காக்குமாறு எழுதிய

பாடல் இது,

-உ0