இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
138 .
206
உண்மையினை உணருவீரே!
மக்களுடை எழுச்சியெலாம் வன்முறையென் றடக்குவதால் மக்களர சென்பதனின் மதிப்பென் னாகும்?
தக்க முறை நடவடிக்கை எடுக்காமல், சட்டமுறைபடைமுறையைப் பயன்படுத்தின் தகைவென் னாகும்?
பக்கவிளை வெண்ணாமல் எதிர்விளைவும் பாராமல், பலவாறாய் ஒதுக்கிவிடப் பதைப்ப தென்ன?
ஒக்கநலம் பேணுகின்ற முறையன்றோ ஒத்தமுறை! உண்மையினை எண்ணிப்பார்த் துணரு வீரே!
- 1987