பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142

210

வெற்றி காண்போம்!

மொழி, இனத்தைக் காவாமல் அரசியலால் பொருளியலால் தமிழர் நலம் மூள்வதில்லை! பழிவழியால்-கொள்ளையிடும் பதவிகளால்நிலையான இனஉரிமை வாய்ப்பதுண்டா? வழியறியா ஏழையரை-எளியவரை - வளைக்கின்ற கட்சிகளால் விளைந்ததென்ன? அழிவதன்முன் தமிழினமே ஒன்றிணைந்தே அழிம்புகளை எதிர்த்திடவே முனைகுவோமே!

குரல்வளையை நெரிக்கின்ற கொடுங்கறுப்புச் சட்டங்களை ஆள்வோர்கள் வரைந்துகொண்டு விரல்நுனியை நீட்டிடினும் வெஞ்சிறையில் தள்ளுகின்ற வல்லாட்சி காணுகின்றோம்! வரலின்றி வீண்செலவால் பொருளியலும் நலிகையிலே வறுமையிங்கு நீங்கிப்போமோ? - நிரல்நிரலாய் எழுச்சியுறு போராட்டம் ஆர்ப்பாட்டம் நிகழ்த்தியிங்கு வெற்றிகாண்போம்!

- 1988