பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

225

செயலலி தாவுடைக் கொழுவுடலும் ஒருநாள் சிறையிருந் தாலுமே உருகிவிடும் மறுநாள்! கயவரே என்னினும் மாந்தர்கள் அன்றோ? கனிவோடு நடத்தினால் திருந்துவார் அன்றோ இருந்து மனநோயில் விழுந்தவர், மற்றவர்க்கே என்றும் மாறுசெய் வம்பர்கள், கொள்ளையர்கள், கொலையர், முனம்பகை வெறியினர்.இவர்களுடன், அரசில்

முரண்படு வோரையும் ஒன்றென எண் ணுவதா? இருந்து)

அரசியல் பேசுவோர் கொடுமையா ளர்க்ளர்: ஆட்சியில் உள்ளவர் நடுநிலையா ளர்களா? உரசி டாமலே கருத்தோடு கருத்தை,

'உண்டு காவலர் படையெனும் மமதையர் இருந்து

சிறையினுள் வைப்பதால் ஆளுமையின் குறைகள்

சீராகிப் போகுமா? ஆளுபவர் நினைக்க:

முறையாகக் கருத்தொடு கருத்தெதிர் வைத்து முடிவு காண் பதனாலே எவர்க்கென்ன தொல்லை?

இருந்து)

அவரவர் கருத்தினை ஆய்வுசெய்யாமல், ஆள்பவர் கருத்தேதான் சரியென்று கொண்டால் தவறினைத் தவிர்த்திட இயன்றிடுமோ, சொல்வீர்; தவறேதான் என்றாலும் சிறைசெய்தல் தீர்வேர் இருந்து

அறிவியல் மிகுவ்ளர் காலம் இஃ தன்றோ? ஆள்பவர்க்கெதிர்சொல்வார்க் கிடர்தரல் நன்றோ? குறிவைத்தே அவர்களைக் கொடுஞ்சிறை தள்ளல் கொடுமையினும் கொடுமை! அதை அரசுசெவி கொள்க!

- 1991