பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156

226

ஊக்கம் இழக்கச் செய்யாதீர்!

ஆக்கம் இழைக்க உதவிலீர் ஆயினும் ஊக்கம் இழக்கச் செய்யாதீர். எமை ஊக்கம் இழக்கச் செய்யாதீர்!

தாக்கம் அடைந்தது தமிழினம் ೨ು.೧ುಡಿಮಿ7 ? தமிழ்நிலம் குலைந்தசீர் எடுத்திங்கு சொல்லவோ?

தேக்கம் அடைந்தனர் தமிழர்கள் அனைத்திலும்! தீந்தமிழ் மொழி, இனம், தேய்ந்தன வினைத்திறம்! -(ஆக்)

பைந்தமிழ் மொழியினை வளர்த்தல்நம் கடமையே!

பாருக்குள் தமிழரை உயர்த்தல்நம் உரிமையே! மைந்தரும் அல்லமோ தமிழன்னைக் கின்றையே! மடமையுள் ஆழ்ந்திடில் நலம்பெறல் என்ற்ையே! -(ஆக்)

மொழி, இனம், நாட்டினுக் குழைத்தல்எம்கொள்கையே!

மூச்சிலும் பேச்சிலும் செயலிலும் வெல்கையே! பழி, துயர், இடர்க்குயாம் அஞ்சுதல் இல்லையே! பற்பல தடை செய்தல் வினைக்கொரு தொல்லையே!

-(ஆக்)

இனம்.உய்ய உழைப்பாருக் கிடர்செயல் ஞாயமா?

எதிரிகள் தொல்லை.அந் நிலையினில் ஒயுமா? மனநலம் கொண்டன்றோ துணைவரல் நல்லது!. மக்களின் வலிவன்றோ எதனையும் வெல்வது?

எம்முட்ைக் கருத்தெடுத் துலகெலாம் பர்ப்புக! ஏட்டிலும் உரையிலும் அவற்றையே நிரப்புக்! உம்முடை, உழைப்பிலும் செயலிலும் தமிழினம்

உய்வதே குறியென வாழ்வினை நடத்துக! -(ஆக்)

- 1991