பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

††

நாடு மறப்பரோ?

மூன்று கடல்களின் நடுவி னில்உயர் முத்த மிழ்த் தனி நாட்டினில் ஊன்று நிலவளம் மலைவ ளஞ்சுரந் துறும் ஆறுகள் பாய்வளம் - ஆன்ற கனிவளம் கான்வ ளம்இவை ஆக்கங் காட்டிடும் வளிவளம் * . தோன்று சிறப்பினை நினைக்கை யில்தமிழ்த் துரய்மை நெஞ்சம் உவக்குமே! ...: -

இல்லை யென்றுளஞ் சோர்ந்த வர்நாட் டுயர்வெ ணாமற் கழிப்பவர், . . . . சொல்லில் வீண்பொழு திறைப்ப வர் நலஞ் சூம்பி வாழ்ந்திடு மேழையர் - . . கல்லை ஒளிவிடு பொன்னெனச்செயுங் கதைய டிப்பவர் யாவரும் . ஒல்லை உழைத்திடில் உயர்வ ரேநாடு உய்ய நினைப்பர் மறப்பரோ?

- 1955 (?)