பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

17

25

செந்தமி ழேஉயிர் மூச்சு - அதன் சிறப்பும் உயர்வுமே நம்பெரும் பேச்சு! செந்தமி ழேஉயர் வாழ்வு- அது சிதைந்திடில் நாமெல்லவர்க்குமே தாழ்வு: முந்தை வளம்பல கூறி - வெறும் மூங்கைச் செயல்பல கூறிடுவோரே, எந்தமிழ் காக்கமுன் நிற்பீர்! - அதற் கேற்ற பணிகளைச் செய்குவீர் இன்றே!

-1959

வாழ்கின்றாரே!

விழியிருக்கும் இருசுடராய்! விளைவிருக்கும் தமிழகத்தின் வீழ்விருக்கும்! மொழியிருக்கும் நிலையினையும் முன்னிருந்த நிலையினையும் எண்ணில், மாற்றார் பழியிருக்கும்! தூய்தமிழர் நெஞ்சில்ெலாம். பதைப்பிருக்கும்! பாழ்மைநீக்க வழியிருக்கும் குனிதொழிலால் வயிற்றிருக்கும் குடல் நிரப்பி வாழ்கின்றாரே! - “. . . . . * *

- 1959