பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

27

இற்றைத் தமிழக

இற்றைநாள் தமிழகத் திழிநிலை நினைக்கின் எரியெனக் கனன்றிடும் நெஞ்சம்; அற்றைநாள் நினைந்தே அனல்மெழு காகும்; ‘ஐயகோ ஓ'வெனக் கரையும்; - பற்றறத் துறந்து விலங்குவாழ் காடே பதியென நண்ணினும் நண்ணும்! குற்றுயிர் உடலிற் குடிபெயர்ந் தோடும்! " கொடுநிலை கூறவும் படுமோ? ! . .

ஆறலை கள்வர் அரசென அமர்ந்தார்; அறிவிலார் அமைச்சென வுயர்ந்தார். வீறிலா நெஞ்சினர் குடிநலங் காக்கும். வியப்புறு படைஞரா நின்றார்; கூறுக றாக மக்களைப் பகுத்தார்; கோடியாய்க் குலங்களை வகுத்தார்; சோறிலா மிகப்பலர் மாண்டிடச், சிலரோ சூட்டுணா முப்பொழு துண்பார்!

வலையுறு மீன்போல் வாய்ந்ததோ ரியக்கம் வாழ்வெனுஞ் சிறப்படைந்ததுவே! குலைவுறு முளத்தார் இருவருங் கூடிக் குடும்பமென் றமைந்துகொள் வாரே ! மலைவுறு தோற்றத் துயர்விலா வுயிரை மக்களென் lன்றெடுத் துவப்பார்! அலைவுறு நோக்கின் விலைமகள் முயக்கம் அன்பெனத் திகழ்ந்துயர்ந் ததுவே!

இழிதகைக் கூளங் குப்பைகள் எழுந்தே இலக்கிய மெனவுலா வருமே! மொழிவுயர் வறியா மூடர்க ளெல்லாம் மூதறி வாளரென் றுயர்ந்தார்: பழிமிகு பேதையர் புன்மொழி யெல்லாம் பாடலா உருவெடுத் தனவே, கழிமடம் பெருகிய பூரியர் தமிழாய் கணக்கரென் றார்ப்பரிப் பாரே!