பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

கணிச்சாறு இரண்டாம் தொகுதி

கட்குடி யுண்டோர் களிப்பெழக் குதித்தல் கலையினுங் கூத்தினும் படுமே! வெட்கமில் பெண்டிர் விதிர்விதிர்ப் புறுதல் வியன்மிகு ஆடலென் பாரே! ஒட்பமில் மாந்தர் உடுக்கையும் மிடுக்கும் உயர்நா கரிகமென் றாகும்! நுட்பமில் லாதார் புல்லுரை யெல்லாம் நூல்வடி வெடுத்துயிர் பெறுமே! -

இரவினில் திருடிப் பகற்பொழு தீதல் ஈகையென் றேத்தவும் படுமே! - கரவுளம் பொய்ம்மொழி கொடுவினை யாவும் கவின்மிகு செல்வமா விளையும்! - வரவினுஞ் செலவினுங் கொள்ளைகள் நிகழ்த்தும் வாணிகர் எங்கனுந் திகழ்வர்! அரவினுங் கொடியார் திருத்தமி லுரைகள் அரசியல் கட்சிக ளாமே!

வாய்மையெர்ன்றில்லாப் பொய்ம்மைக ளெல்லாம் வழக்காய் வார்,உரு வெடுத்த! தூய்மையில் தோயாப் போலிகள் முற்றுந் துறவியர் துவருடை பூண்ட, - - தாய்மையிங் கில்லை! பெண்மையிங் கில்லை! தனித்திறல் ஆண்மையிங் கில்லை! பேய்மைகள் யாவும் மக்களென் பெயராற் பிறந்திவண் திரிவன் கண்டீர்!

- 1962