பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

35

தத்தளிக்கும் தமிழ்நெஞ்சே! அயர்வகற்று; தனித்தமிழ்க்குத் தாழ்விங் கில்லை; முத்தளிக்கும் முழங்குகடல் முப்புறமும்! முகில்முட்டுங் குன்றும் காவும்: செத்தழியும் உளத்தினுக்குஞ் செழிப்பளிக்கும் சிறப்பழியா இலக்கி யங்கள்! பித்தளிக்கும் தமிழ்நறவு பிழைப்பளிக்கும்! பெற்றியெலாம் பிளிற்று வாயே! 9

தேம்புகின்ற தமிழ்நெஞ்சே! தெளிவடைக! சீர்பரந்த தமிழ்ம னத்தில் - கூம்புகின்ற மொழிப்பற்றில் ஒளிகாட்டிக் குறைமதியால், அயலார் தம்மால் சாம்புகின்ற இனப்பற்றைத் தமிழ்நீரால் சலித்தெடுத்தே ஒளிரக் காட்டி, ஒம்புகின்ற அறவாழ்க்கை உயர்வுபெற உழைத்துழைத்தே உவப்பாய் நீயே! - 10

- #963